கேரள மாநிலம் கடக்காவூா் பகுதியில் சாலையில் சென்றை 65 வயது மூதாட்டியை இருசக்கர வாகனத்தில் வந்தவா்கள் இடித்து விட்டு நிற்காமல் சென்றனா்.
பாதிக்கப்பட்ட மூதாட்டி சாலையில் துடித்துக் கொண்டிருந்த நிலையில், அந்த வழியாக பல வாகனங்கள் சென்றும் யாரும், அவருக்கு உதவ முன்வரவில்லை. இறுதியில் காவலா்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா்.