இந்தியில் பேசும் சூப்பர் ஸ்டாரின் முதல் இந்தி பாடல்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 23 வருடங்கள் கழித்து கோச்சடையான் படத்துக்காக A.R.ரஹ்மான் இசையில் ஒரு பாடல் பாடினார். இதற்கு முன்பு மன்னன் படத்திற்காக இளையராஜா இசையில் ஒரு பாடலை பாடியுள்ளார். இது ஒரு பழைய  செய்திதான் என்றாலும், தற்போது கோச்சடையான் படத்தை பற்றி புதிதாக சில செய்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன.

கோச்சடையானின் இந்திப் பதிப்புக்காக தன் சொந்தக் குரலில் A.R.ரஹ்மான் இசையில் ஒரு பாடல் பாடினார் ரஜினி. இந்தப் பாடலை இர்ஷத் கமில் என்பவர் எழுத, A.R.ரஹ்மான் பதிவு செய்தார்.

பொதுவாக தான் எந்த மொழியில் நடித்தாலும், தன் சொந்தக் குரலில் டப்பிங் பேசுவதுதான் ரஜினி வழக்கம். அவருக்கு இந்தி மிக நன்றாகத் தெரியும். இதுவரை அவரது அனைத்து இந்திப் படங்களிலும் அவரே பேசியுள்ளார். ஆனால் இந்தியில் பாடுவது இதுதான் முதல் முறை.

கோச்சடையான் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இப்போது இரண்டாவது பகுதிக்கான டப்பிங் நடக்கிறது. ஜூன் முதல் வாரத்தில் படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.