ஜம்மு-காஷ்மீர் வைஷ்ணவ தேவி குகைக்கோவில் நவராத்திரி விழா !

vaishnodevi1._L_styvpf

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரெசாய் மாவட்டத்தின் கத்ரா என்ற ஊரில்  வைஷ்ணவ தேவி குகைக்கோவில் உள்ளது. இந்த கோவிலில்  சைத்ர (வசந்த) நவராத்திரி விழா விமரிசையாக தொடங்கியது.

வட இந்தியாவில் போற்றப்படும் வழிபாட்டுத் தலங்களில் இதுவும் ஒன்று. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 5,200 அடிகள் உயரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் 8 லட்சம் பக்தர்கள் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு அன்னையின் அருள் வேண்டி வருகின்றனர்.

இந்நிலையில் அருள் தரும் அம்மனுக்கு உகந்த பண்டிகையான நவராத்திரி விழா நேற்று தொடங்கி அடுத்த 9 நாட்களுக்கு நடைபெறும். நவராத்திரி விழாவை முன்னிட்டு வைஷ்ணவி தேவி கோவிலுக்கு திரளான பக்தர்கள் வந்து வைஷ்ணவி தேவியை தரிசனம் செய்தனர்.

இந்த விழாவைக் காணப் பல மாநிலத்தில் இருந்து மக்கள் கூட்டம் குவியத் தொடங்கியுள்ளனர். பக்தர்கள் பாதுகாப்புக்காக வைஷ்ணவ தேவி கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Response