‘அசோக் சக்ரா’ விருதை வழங்கும் போது கண் கலங்கிய ஜனாதிபதி

Ram-Nath-Kovind-644x362

காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் வீரமரணம் அடைந்த விமானப்படை கமாண்டோவின் மனைவியிடம் இன்று ‘அசோக் சக்ரா’ விருதை அளித்தபோது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கண் கலங்கினார். காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் வீரமரணம் அடைந்த விமானப்படை கமாண்டோவின் மனைவியிடம் இன்று ‘அசோக் சக்ரா’ விருதை அளித்தபோது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கண் கலங்கினார். இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவின்போது, ஜே.பி. நிராலாவின் மனைவி சுஷ்மானந்த், தாயார் மாலதி தேவி ஆகியோரிடம் ஜனாதிபதி இந்த விருதை வழங்கினார். அப்போது அவர்களின் முகத்தில் இருந்த சோகத்தை கண்டு துயரமடைந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கண் கலங்கினார். பின்னர், தனது கைக்குட்டையால் கண்களையும், முகத்தையும் அவர் துடைத்து கொண்டார்.

Leave a Response