தனது தந்தை என்டிஆரின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்க
தயாராகிக்கொண்டிருக்கிறார் பாலகிருஷ்ணா.
தனது தந்தை என்டிஆரின் நினைவு நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு ஊடகங்களை சந்தித்தார்.அப்போது பாலகிருஷ்ணா கூறுகையில், எனது தந்தை என்டிஆர் புகழ் பெற்ற நடிகர் மட்டுமின்றி, ஆந்திராவின் முதலமைச்சராக இருந்தவர். அவருக்கு இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருது இதுவரை வழங்கப்படவில்லை. பல அரசுகள் மாறியபோதும் என்டிஆருக்கு பாரத ரத்னா விருது கிடைக்கவில்லை. அதனால், என்டிஆருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பேன். அதற்காக போராடுவேன் என்று பாலகிருஷ்ணா கூறியுள்ளார்.