வீட்டில் பதுக்கி வைத்திருந்த 912 மதுபாட்டில்கள் பறிமுதல்…!

காவல்துறையினருக்கு ஷெனாய்நகரில், உள்ள ஒரு வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து கீழ்பாக்கம் உதவி ஆணையர் G. ஹரிகுமார், காவல் ஆய்வாளர் தயாளன், மற்றும் உதவி ஆய்வாளர் சுபாஷ் ஆகியோர் தலைமையில் போலீசார் அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு உள்ள வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். அங்கு மொத்தம் 19 பெட்டிகளில், மொத்தம் 912 மதுபாட்டில்கள் இருந்தன. அந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

collage-2018-01-16

முதற்கட்ட விசாரணையில் மதுபாட்டில்கள் சுதா, தாஸ், சாந்தி, மற்றும் அவரது மகன் இளஞ்சூரியன் ஆகியோருக்கு சொந்தமானது என தெரிய வந்தது. தலைமறைவாக உள்ள அனைவரையும் போலீசார் தேடி வருகின்றனர்

Leave a Response