பொன்வண்ணன் ராஜினாமாவை வாபஸ் பெறுவதாக அறிவிப்பு

 

நடிகர் பொன்வண்ணன் தனது ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார். மூத்த கலைஞர்கள் கேட்டுக் கொண்டதால் ராஜினாமாவை வாபஸ் பெறுவதாக பொன்வண்ணன் விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் சங்க துணை தலைவர் பதவியை பொன்வண்ணன் ராஜினாமா செய்திருந்தார். நடிகர் சங்க செயலாளர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என இரண்டு பதவிகளை வகித்து வருகிறார் விஷால். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக மனுத்தாக்கல் செய்தது திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

 

பலரும் அவருடைய செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பொன்வண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமாவுக்கான காரணத்தை கடிதமாக எழுதி நடிகர் சங்கத்தின் தலைவர் நாசருக்கு அனுப்பி வைத்தார். பொன்வண்ணன் அளித்த ராஜினாமா கடிதத்தை ஏற்க தென்னிந்திய நடிகர் சங்கம் மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பொன்வண்ணன் ராஜினாமா கடிதத்தை பெறுவதாக அறிவித்துள்ளார்.

Leave a Response