கன்னியாகுமரி கடற்பகுதியில் மேலடுக்கு சுழற்சி: தென் மாவட்டங்களில் மீண்டும் மழை!

13-1513137470-rain345612

கன்னியாகுமரி கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சியால் தென் மாவட்டங்களில் மீண்டும் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. தொடக்கத்தில் ஓரளவுக்கு தொடங்கிய மழை பின்னர் ஓய்வெடுக்க தொடங்கிவிட்டது. இந்நிலையில் வங்கக்கடலில் அண்மையில் உருவான ஓகி புயலால் கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் அணைகள், குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பின.

இதைத்தொடர்ந்து அந்தமான் அருகே உருவான மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இதனால் வடதமிழகத்திற்கு நல்ல மழை கிடைக்கும் என கூறப்பட்டது. ஆனால் அந்த காற்றழுத்தம் வலுவிழந்த நிலையிலேயே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஆந்திரா வழியாக ஒடிசா சென்றது. இதனால் வடதமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மழை பறிபோனது. அமைதியாக வங்கக்கடல் சென்னை உள்ளிட்ட இடங்களில் கடும் பனிமூட்டம் தொடங்கியுள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக வங்க கடலில் அமைதியான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் கன்னியாகுமரி கடல் பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மக்கள் மகிழ்ச்சி இன்றும் தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Leave a Response