ஒவ்வொரு நாளும் 5 நிமிடம், 10 நிமிடம் மட்டுமே நடித்தார். இதனால் நிறைய காட்சிகளில் அவருக்கு பதிலாக டூப் நடிகரை பயன்படுத்தி படமாக்கினோம். பாதி படம் முடிந்த நிலையில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கலாம், தற்போது எடுத்தவரை உள்ள காட்சிகளை வைத்து முதல் பாகமாக வெளியிடுங்கள் என்றார்.இரண்டாம் பாகம் எடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்துபோட அவர் வரவில்லை. படப்பிடிப்புக்கு சரியாக அவர் ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை.
படத்தின் முதல் பாகம் வெளிவந்து சரியாக ஓடவில்லை. இரண்டாம் பாகத்தில் நடிக்கவும் அவர் வரவில்லை. இதனால் எனக்கு ரூ.20 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. விநியோகஸ்தர்களுக்கும் பைனான்சியர்களுக்கும் பணம் கொடுக்க வேண்டி இருக்கிறது.
சிம்புவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரைத் தேடி அவர் வீட்டுக்குச் சென்றால் மணிக்கணக்கில் என்னை காக்க வைக்கிறார். இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு மீது புகார் அளித்தேன்.
சிம்புவால் பெரிய நஷ்டமடைந்து நான் நடுத்தெருவுக்கு வந்துவிட்டேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு மைக்கேல் ராயப்பன் கூறினார்.