காஷ்மீரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி!

ca2735d8bf9c65ec6bacaca3bf852f7f

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பத்கம் மற்றும் பாராமுல்லா பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை பதுங்கி இருந்து அவ்வப்போது பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வந்தனர். இதையடுத்து பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் வேட்டையாடி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை, பத்கம் மாவட்டத்தில் உள்ள பாராமுல்லா பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், வீரர்களுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை ஏற்பட்டது.

சில மணி நேரங்கள் நீடித்த சண்டையில் நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும, பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள சோபோர் பகுதியிலும் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த மோதலில் இந்திய வீரர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Response