இரட்டை இலை தீர்ப்பால் ஜெ.,வின் ஆன்மா மகிழ்ச்சி அடையும்: பன்னீர்

1171a3541f34f953d24d507ff0da8194

இரட்டை இலைச்  சின்னம் மீண்டும் கிடைத்திருப்பதால் ஜெ.,வின் ஆன்மா மகிழ்ச்சி அடையும்என துணை முதல்வர் பன்னீர் செல்வம் கூறினார்.
இரட்டை இலை சின்னம் கிடைத்தது குறித்த அவர் கூறியதாவது:
சின்னம் மீண்டும் கிடைத்திருப்பதால் ஜெ.,வின் ஆன்மா மகிழ்ச்சி அடையும். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் நாம் என்பதை இந்த தீர்ப்பு உண்மையாக்கி உள்ளது. சின்னம் கிடைத்த விவகாரத்தில் பின்னாலும் முன்னாலும் யாரும் இல்லை. தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பால் ஒன்றரை கோடிதொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கட்சிக்கு ஏற்பட்ட சோதனைகள் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பின் மூலம் நிவர்த்தியாகி உள்ளது.
 முதல்வர் பழனிசாமி கூறியது,
இந்த இயக்கத்தை உடைக்கவும் ஆட்சியை கவிழக்கவும் நினைத்தவர்களுக்கு இந்த தீர்ப்பு சம்மடி அடி . . தேர்தல் ஆணையம் நீதி, நேர்மை ,உண்மையை நிலைநாட்டி உள்ளது. அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக, மகிழ்ச்சியாக இருக்கிறோம். என கூறினார்.

Leave a Response