ஜிம்பாப்வே மக்கள் மகிழ்ச்சி… பதவியை ராஜினாமா செய்தார் ராபர்ட் முகாபே!


19CHSKOMYGABE

 ஜிம்பாப்வே மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்கின்றனர்… மிதக்கின்றனர்… எதற்காக தெரியுங்களா?
ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தனது பதவியை ராஜினாமா செய்ததாக அறிவித்துள்ளது அந்நாட்டு பாராளுமன்றம் அறிவித்துள்ளது. இதுதான் மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
ஜிம்பாப்வே நாடு, இங்கிலாந்திடம் இருந்து 1980-ம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற காலம் முதல், அந்த நாட்டில் அசைக்க முடியாத ஆளுமையாக இருந்து ஆட்சி நடத்தியவர் ராபர்ட் முகாபே (93). அவருக்கு பின்னர் அதிபர் பதவியை அடைவதற்கு துணை அதிபராக இருந்த எமர்சன் மனன்காக்வா திட்டமிட்டார்.

201711171453419419_1_robertmugabewife._L_styvpfஆனால் அவருக்கு முட்டுக்கட்டை விழுந்தது. முகாபேயின் மனைவி கிரேஸ் முகாபேவும் களத்தில் குதித்தார். இந்த அதிகார போட்டியில் மனைவிக்கு ஆதரவாக செயல்பட்ட முகாபே, மனன்காக்வாவை பதவியில் இருந்து நீக்கினார். வழக்கம் போல் உட்கட்சி மோதல் வெடித்தது. ராணுவம் களத்தில் இறங்கியது.
கடந்த 15-ந் தேதி அதிபரின் அதிகாரத்தை ராணுவம் அதிரடியாக பறித்தது. இந்நிலையில் ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தனது பதவியை ராஜினாமா செய்ததாக அறிவித்துள்ளார். பதவி விலக மறுத்த நிலையில் முகாபே ராஜினாமா செய்ததாக ஜிம்பாப்வே பாராளுமன்றம் அறிவித்துள்ளது. முகாபே வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

n14கடந்த சனிக்கிழமையன்று மக்களும் முகாபேவுக்கு எதிராக அணிவகுத்து மாபெரும் எழுச்சி பேரணி நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவர் ராஜினாமா செய்தது பொதுமக்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அவர்கள் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். புதிய அதிபராக முன்னாள் துணை அதிபர் எம்மர்சன் நாங்காக்வா பதவியேற்பார் என கூறப்படுகிறது.

Leave a Response