தினகரனின் ஜோதிடர் வீட்டிலும்  3-வது நாளாக தொடரும் சோதனை!

images

 

 

திருப்பாதிரிப்புலியூரில் உள்ள தினகரனின் ஜோதிடர் சந்திரசேகரன் வீட்டில் 3-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. தங்கம், சொத்துக்கள் வாங்கி குவித்தது, பங்கு சந்தையில் முதலீடு செய்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதே போல் புதுச்சேரி அம்பலத்தாடையார் வீதியில் உள்ள லட்சுமி நகைக்கடையில் 3-வது நாளாக வருமான வரி சோதனை நடைபெறுகிறது. லட்சுமி குழுமத்தின் கிளை நிறுவனங்கள், நட்சத்திர விடுதி உள்ளிட்ட இடங்களிலும் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 3 நாட்களாக நடைபெற்று வரும் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Response