சசிகலா குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஜெயா டிவி அலுவலகம் உட்பட 190 இடங்களில் இன்று காலை முதல் 6 மணிநேரத்துக்கும் மேல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரால் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.
ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையத்தில் இன்று காலையிலிருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின் போயஸ் தோட்டத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. அப்போது நடந்த சோதனையின்போது, தி.மு.க. தலைவர் கருணாநிதி தமிழக முதல்வராக இருந்தார்,