‘என்னை சிறையில் தள்ளட்டும். சிறையில் இருந்து வெளிவந்து அரசியலில் செய்வேன்’ – கெத்து காட்டும் தினகரன்

 

நவம்பர் 9. வியாழக்கிழமை காலை ஊடகங்களில் வெளியான முதல் தெறிப்புச் செய்தியே, “ஜெயா டிவி, ஜாஸ் சினிமாஸ், மிடாஸ், சுரானா குழுமம், டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வீடு, நிறுவனங்களில் ரெய்டு. இந்தியா முழுவதும் 4 பெருநகரங்களில் 187 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்” என்பதுதான்.

ஒட்டுமொத்த ஊடக கண்காணிப்பும் தினகரன் வீட்டுப்பக்கம் திரும்ப அவரோ மனைவி, மகளுடன் மிக இயல்பாக கோ பூஜையில் ஈடுபட்டுவந்தார்.

ttvnewjpg

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு சற்றும் அலட்டிக்கொள்ளாமல் பதிலளித்த டிடிவி தினகரன், இதற்கு முன் இல்லாத அளவுக்கு மத்திய அரசை சரமாரியாக விமர்சித்தார்.

“வருமான வரித்துறை சுதந்திரமாக இயங்கும் அமைப்பு என்று சொல்வது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் செயல். சசிகலாவும், நானும் அரசியலில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவும் எங்களை ஒழித்துக்கட்டவுமே இந்த ரெய்டு. வருமான வரி சோதனைகளுக்கு நான் அஞ்சிவிட மாட்டேன். மத்திய அரசு என்னை சிறையில் தள்ளட்டும். சிறையில் இருந்து வெளிவந்து அரசியலில் ஈடுபட்டு தகுந்த பதிலடி கொடுப்பேன். பணமதிப்பு நீக்க நடவடிக்கையை விமர்சித்ததற்கெல்லாம் ரெய்டு நடத்துவார்கள் என்றால் மீண்டும் கூறுகிறேன் அது தோல்வித் திட்டமே. 30 வயதிலேயே சிறையை சந்தித்தவன். மக்கள் மத்தியில் எங்களுக்கே ஆதரவு இருக்கிறது. இரட்டை இலை கிடைத்தாலும்கூட மக்கள் எடப்பாடி அரசை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். தமிழக அரசை மக்கள் வெறுக்கின்றனர்” என்றார் தினகரன்.

 

Leave a Response