தேவர் ஜெயந்தியை முன்னிட்டு இராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவு!

devar
இராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் வாடகை வாகனங்களில் பசும்பொன்னிற்க்கு வருவதற்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறைக் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா உத்தரவு.

இராமநாதபுரம் மாவட்டம், கமுதி பசும்பொன்னில் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவிற்க்கு முதன் முறையாக குற்றவாளிகளை அடையாளம் காட்டும், புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பேஸ் டிடெக்ட்டிவ் (குயுஊநு னுநுவுநுஊவுஐஏநு) கருவி பயன்படுத்த பட்டுள்ளது.

மேலும் 300 கண்காணிப்பு கேமிராக்கள், 18 சோதனை சாவடிகள், 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். 29,30 ஆகிய இரு நாட்களுக்கு இராமாநாதபுரம் மாவட்டம் முழுவதிலும் இருந்து பசும்பொன் செல்ல 290 அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என்று காவல்துறைக்கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்தார்.

Leave a Response