உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் அம்ன்பிரீத் சிங் வெண்கலம் வென்றார்.

201710271522142914_Amanpreet-Singh-wins-bronze-medal-in-Mens-50m-pistol-finals_SECVPF

டெல்லியில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், 50 மீட்டர் ஆண்கள் பிரிவில் இந்திய வீரர் அம்ன்பிரீத் சிங் வெண்கலம் வென்றார்.

சர்வதேச சூட்டிங் ஸ்போர்ட் பெடரேசன் சார்பில் டெல்லியில் உள்ள டாக்டர் கர்ணி சிங் துப்பாக்கி ரேஞ்சர்ஸில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் இன்று 50 மீட்டர் ஆண்கள் பிரிவுக்கான இறுதி சுற்று போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவின் அமன்பிரீத் சிங் வெண்கலம் வென்றார். இது இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது பதக்கமாகும்.
செர்பியாவை சேர்ந்த டாமிர் மிகெக் தங்கமும், உக்ரைனை சேர்ந்த ஒலே உமுல்சுக் வெள்ளிப்பதக்கமும் வென்றனர்.

ஏற்கனவே, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் அணிகள் பிரிவில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட ஹீனா சித்து – ஜித்து ராய் ஜோடி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Response