த்துக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரி எனக்கூறி அடையாள அட்டையை காண்பித்த ஒருவர் விமான நிலையத்துக்குள் நுழைய முயன்றார். அவர் காண்பித்த அடையாள அட்டையில் ராஜசேகர என இருந்ததால் சந்தேகம் கொண்ட போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அதில் அந்த நபர் மதுரை அண்ணா நகரில் உள்ள தாசில்தார் நகரை சேர்ந்த இதயத்துல்லா என்பது தெரியவந்தது.
மேலும் இவர் தூபாயிலிருந்து வந்த தன் நன்பரை வரவேற்க சென்றுள்ளார் அப்போது தான் வைத்திருந்த அடையாள அட்டையை காட்டி விமான நிலையத்திற்குள் நுழைந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
போலி அடையாள அட்டை எப்படி கிடைத்தது என்பது குறித்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.