108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
தீபாவளி போனஸ் கோரி அக்டோபர் 17-ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் சுமார் 5-ஆயுரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஆம்புலன்ஸ் சேவையில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு தீபாவளி போனஸ் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும் வருகிற அக்டோபர் 17-ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்..
இவர்களின் வேலை நிறுத்தத்தால் நோயாளிகளும் பொதுமக்களும் பெருமளவு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.