வங்கி ஊழியர்களுக்கு செம ஜாலி!

bank

நாளை வெள்ளிக்கிழமை ஆயுத பூஜை என்பதாலும் சனிக்கிழமை விஜயதசமி என்பதாலும், வங்கிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால், அன்றைய தினமும் வங்களுக்கு விடுமுறை. இதையடுத்து, திங்கள் கிழமை காந்தி ஜெயந்தி என்பதால், அனைத்து வங்கிகளுக்கும் நான்கு நாள்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

atm

இவ்வாறு, அனைத்து வங்கிகளுக்கும் நான்கு நாள்கள் தொடர்ந்து அரசு விடுமுறை இருப்பதால், அந்நாள்களில் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ள முடியாது. இந்த நாள்களில் ஏற்படும் பணத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க, வங்கிகளில் நேரடியாக மேற்கொள்ளும் அனைத்துப் பரிவர்த்தனைகளையும் இன்றே முடித்துக்கொள்ளலாம். ஏ.டி.எம்-களிலும் பணத்தட்டுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால், முன்னரே பணத்தை கைவசம் எடுத்துவைத்துக்கொள்ளலாம். இதற்காக, அனைத்து ஏ.டி.எம் மையங்களிலும் முன்னேற்பாடாக நேற்றே பணம் நிரப்பப்பட்டுவிட்டதாக வங்கிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

Leave a Response