பத்திரிகையாளர் சுட்டுக்கொலை; கமல்ஹாசன், ராகுல்காந்தி டிவிட்டரில் கருத்து!

kamal600

மூத்த பத்திரிகையாளரும் சமூகப் போராளியுமான கெளரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

gauri145-05-1504628678

இந்த சம்பவம் குறித்து, தன் டிவிட்டர் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் ‘விவாதத்தை துப்பாக்கியால் வெல்ல முனைவது மோசமான வழி’ என கண்டக் கருத்து தெரிவித்துள்ளார்.

ragulgandhi

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, முதல்வர் சித்தராமையாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பல்வேறு விஷயங்களை கேட்டறிந்ததாக சொல்லப்படுகிறது.

அது குறித்து ராகுல் காந்தி டிவிட்டரில் ‘கெளரி லங்கேஷ் கொலை தொடர்பாக முதல்வர் சித்தராமையாவிடம் பேசினேன். இது மிகவும் முக்கியமான ஒன்று. கொலை குற்றவாளிகள், கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினேன்’ என கருத்து தெரிவித்துள்ளார்!

Leave a Response