தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.
முதல்வருடன் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி உள்ளிட்டோரும் செல்கின்றனர்!
சேலத்திலிருந்து கார் மூலம் வரும் முதல்வருக்கு விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட சிந்தலக்கரை வெக்காளியம்மன் கோயில் முன் மாலை 3 மணிக்கும், தொடர்ந்து ஓட்டப்பிடாரம் தொகுதிக்குள்பட்ட குறுக்குச்சாலை மற்றும் புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி ஆகிய இடங்களிலும், தூத்துக்குடி ஜெயராஜ் ரோடு காய்கனி மார்க்கெட் அருகிலும் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் எடப்பாடி பழனிசாமி சாயர்புரம் போப் கல்லூரியில் நடைபெறும் தன்னாட்சி கல்லூரி அறிவிப்பு விழாவில் கலந்துகொண்டு, தன்னாட்சி கல்லூரியை தொடங்கிவைக்கிறார்.
அதன்பின், தூத்துக்குடி மாணிக்கம் மஹாலில் நடைபெறும் அதிமுக முன்னாள் மாவட்டச் செயலர் பி.ஏ.ஆறுமுகநயினார் இல்ல திருமண நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திப் பேசுகிறார்.
முதல்வர் வருகையையொட்டி பலத்த போலீல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.