கனமழையால் சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் ஒகேனக்கல் அருவி!

Hogenakkal2
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீர் பெருவாரியாக கொட்டுகிறது. இதனால் பரிசல் போக்குவரத்துக்கு 6-வது நாளாக தடை தொடர்கிறது.

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் குளிப்பதை சுற்றுலாப் பயணிகள் தவிர்க்குமாறு போலீஸார் கேட்டுக்கொண்டதையடுத்து பயணிகள் ஏமாற்றமடைந்தனர்!

ஒகேனக்கல்லுக்கு நேற்று திரண்டுவந்த சுற்றுலாப் பயணிகளில் பலர் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவியில் கொட்டிய தண்ணீரில் குளித்தார்கள்!

தவிர, தொங்கு பாலத்திற்குப் போய் ஒகேனக்கல்லின் இயற்கை அழகை ரசித்து மகிழ்ந்தார்கள்!
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி போலீஸார் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்!

Leave a Response