அந்தமானில் நிலநடுக்கம் !

erthkuwik
அந்தமான் தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 5.4ஆக பதிவானது.

அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் இருந்து சுமார் 160 கி.மீ. தூரத்தில் 86.8 கி.மீ. ஆழத்தில் இன்று அதிகாலை 5 மணிக்கு நில நிடுக்கம் உணரப்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 5.4-ஆக பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதமோ அல்லது பொருள்கள் சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் ஏதும் இல்லை. இதேபோல் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி அந்தமான் தீவில் சுமார் 10 கி.மீ. ஆழத்தில் 5.0 ரிக்டர் அளவு கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Response