காதலியைத் தொலைத்த இயக்குநர், நடிகர்!

mounam.jpg2
சைட்டோ பிலிம் கார்ப்பரேசன் எஸ்.யசோதா தயாரிக்கும் படத்திற்கு “ என்னோடு நீ இருந்தால் என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் மு.ரா.சத்யா கதாநாயகனாக, நாயகியாக மானசா நாயர் நடிக்கிறார். மற்றும் வெ.ஆ.மூர்த்தி, ரோகினி, அஜய்ரத்னம், வையாபுரி, பிளாக்பாண்டி, அழகு,மீரா கிருஷ்ணன், சஞ்சய், சாந்தி ஆனந்தராஜ், பயில்வான் ரங்கநாதன், நெல்லைசிவா ஆகியோர் நடிக்கிறார்கள்!

”பணக்கார பெண் ஒருத்தியை சாதாரண வேலை செய்யும் ஒருவன் காதலிக்கிறான். காதலி திடீரென் காணாமல் போகிறாள். காதலன் அவளை தேடுகிறான். அப்போது அவன் பல்வேறு திகில் சம்பவங்களைச் சந்திக்கிறான். அதையெல்லாம் கடந்து காதலியை கண்டுபிடித்தானா என்பதே கதைக்களம். விறுவிறு திகில் படமாக இருக்கும்’’ என்கிறார் இயக்குநர் மு.ரா.சத்யா!

ஒளிப்பதிவு – நாக.சரவணன்
இசை – கே.கே
எடிட்டிங் – ராஜ்கீர்த்தி
கலை – எஸ்.சுப்பிரமணி
நடனம் – கேசவன்
ஸ்டன்ட் – ஸ்டன்ட் ஜி
தயாரிப்பு மேற்பார்வை – எஸ்.ஆனந்த்
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் – மு.ரா.சத்யா
தயாரிப்பு – எஸ்.யசோதா

Leave a Response