செப்.6 முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ottu
வரும் புதன்கிழமை முதல் வாகன ஓட்டிகள் அசல் உரிமத்தை வைத்திருப்பது கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செப்.1 முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. லாரி உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. மேலும் வரும் புதன்கிழமை முதல் வாகன ஓட்டிகளிடம் அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை மற்றும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Leave a Response