பழனிச்சாமி இல்லத்தில் நான்கு மாவட்ட எம்.எல்.ஏக்களுடன் திடீர்ஆலோசனை!

edappadi-palanisamy

இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரது இல்லத்தில் திருச்சி, விழுப்புரம் உட்பட நான்கு மாவட்டங்களின் எம்.எல்.ஏக்களுடன் ஆலோசனை நடத்தினார். இச்சந்திப்பில் மாவட்ட அமைச்சர்களும் உடன் இருந்தனர். இந்த ஆலோசனை சுமார் 3 மணிநேரம் நடைபெற்றது.

எம்.எல்.ஏக்களின் தொகுதிகளுக்கான தேவைகள் உள்ளிட்டவை இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டன. இருப்பினும் எம்.எல்.ஏக்களை தக்க வைக்கும் முதல்வர் எடப்பாடியாரின் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது.

Leave a Response