ஜெ. ஆன்மாவை பாட்டிலில் அடைக்க முயற்சி! கேரள ஜோதிடரின் அடுத்த அதிரடி

ja

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மா இன்னும் போயஸ் இல்லத்தையே சுற்றி சுற்றி வருவதாகவும், விரைவில் ஆன்மா பல செயல்களை செய்ய உள்ளதாகவும் பிரபல கேரள ஜோதிடர் வெங்கடசர்மா பிரபல தனியார் செய்தி தொலைகாட்சியிலும், பிரபலவார இதழுக்கும் பேட்டி அளித்துள்ளார்.

கேரள ஜோதிடர் வெங்கடசர்மா கூறுகையில்:-

ஜெயலலிதா இறந்து போனதாக சொல்லப்பட்ட நாளுக்கு 2 மாததிற்கு முன்பே அவர் இந்த உடலைத் துறந்துவிட்டாராம்.

ஆனால், அவர் இறந்தது தெரியாமல், லட்சக்கணக்கான தொண்டர்கள், கோயிலில் அவர் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்தும், அவருக்காக தெய்வத்திடம் முறையிட்டதினாலும், அவருடைய ஆன்மா அங்கே சித்தர் நிலையில் குடி கொண்டதாம்.

அந்த ஆன்மாவுக்கு போகர் உள்ளிட்ட சித்தர்கள் வழிகாட்டினார்களாம்.

பின்னர் அவர்கள் சென்றுவிட இப்போது இடைக்காட்டுச் சித்தரின் வழிகாட்டலில் ஜெயலலிதா ஆன்மா உலவுகிறதாம் என கேரள ஜோதிடர் வெங்கடசர்மா பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

ஆனால் தற்போது அவர் கூறுகையில்:-

ஜெ. ஆன்மாவை பிடித்து ஒரு பாட்டிலில் அடைத்து வைத்துவிட்டால், ஆன்மாவிற்கான சக்தியால் எதனையும் செய்து விட முடியாது என்பதற்காக, சிலர் ஆன்மாவை பாட்டிலில் அடைக்க முயற்சி செய்துள்ளதாக தற்போது தெரிவித்துள்ளார்.

இதனால் சாமியாரின் இந்த பேச்சு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Response