பேரறிவாளன் வீட்டிற்கு சென்று கையெழுத்து பெற்ற போலீஸார் !

pol
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன்,
நேற்று (வியாழக்கிழமை) ஒரு மாதகால பரோலில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அவரை வேலூர் மத்திய சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அவரது சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு போலீஸாரால் அழைத்துச் சென்று விடப்பட்டார்.

பின்னர் நிபந்தனைப்படி பரோலில் விடுவிக்கப்பட்ட பேரறிவாளன் தினமும் காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும். ஆனால் பாதுகாப்பு காரணம் கருதி போலீஸார் இன்று அவரது வீட்டிற்கு சென்று கையெழுத்து பெற்றனர்.

Leave a Response