கல்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிக்க செல்லவில்லை.
காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம், புதிபட்டினம், உய்யாலிகுப்பம், மாமல்லபுரம், கொக்கிலமேடு, சதுரங்கப்பட்டினம், உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடல் காணப்படுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.
கடல் அரிப்பினால் கரையில் வைக்கப்பட்டிருந்த மீன்பிடி வலைகள் அடித்து செல்லப்பட்டன. கடல் அரிப்பினால் படகுகளை நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் தவித்து வருவதாகவும், தண்ணீர் ஊருக்குள் வந்துவிடும் என்ற அச்சத்தில் வாழ்ந்து வருவதாகவும் அப்பகுதி மீனவர்கள் வருத்தம் தெரிவித்தனர். இது குறித்து அரசு துரித நடவடிக்கை எடுத்து தூண்டில் வளைவு அமைத்து கொடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.