Heroine cried because of Dhanush?:

உதைத்த தனுஷ், அழுத நாயகி – மரியான் படப்பிடிப்பில் பரபரப்பு:

ஆல்பங்களை இயக்கி கொண்டிருந்த பரத்பாலா முதல் முறையாக இயக்கி தனுஷ் நடித்து வரும் படம் மரியான். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பூ படத்தில் நடித்த பார்வதி நடிக்கிறார்.

பொதுவாக முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் நடிகைகள், அந்த நடிகர்களுடன் சகஜமாக பேசுவார்கள். ஆனால் பார்வதியோ தனுஷை பார்த்தால் ஒரு வணக்கம் கூட போடுவது கிடையாதாம். டைரக்டர் பரத்பாலாவிடம் ரொம்ப ஒட்டி உறவாடுகிறாராம். இதனால் தனுஷ்க்கு ஒரு வருத்தமாம்.

இந்நிலையில், பார்வதியை எட்டி உதைப்பது போன்று ஒரு காட்சியில் தனுஷை நடிக்க சொன்னபோது, நிஜமாலுமே மொத்த பலத்தையும் ஒன்று திரட்டி பார்வதியை ஓங்கி மிதித்து விட்டராம். இதனால் காலை பிடித்துக்கொண்டு, என்ற குருவாயூரப்பா என்று கத்தியபடி ஓவென்று அழுது விட்டாராம் பார்வதி. ஆனால் அதற்கு ஒரு ஸாரி கூட சொல்லவில்லையாம் தனுஷ். இத்தனை நாளும் அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தை கொட்டித் தீர்த்து விட்ட உடனே ஸ்பாட்டில் இருந்து எஸ்கேப்பாகி விட்டாராம்.