சுதந்திர தின விழாவில் முதல்வரின் புதிய அறிவிப்புகள்

sudha
ஆண்டுதோறும், சுதந்திர விழாவின் போது சென்னை ராஜாஜி சாலையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் தேசியக்கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதை ஏற்பது வழக்கம். அந்த வகையில், தற்போது முதல் முறையாக தமிழக முதல்வராகியுள்ள எடப்பாடி பழனிசாமி இன்று நாட்டின் 71வது சுதந்திர விழாவை முன்னிட்டு கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மக்களுக்கு உரையாற்றினார்.

அதில் அவர் கூறியதாவது:-

சுதந்திர போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் மாதம் ரூ.12 ஆயிரத்திலிருந்து ரூ.13 ஆயிரமாக உயர்த்தப்படும்.

குடும்ப ஓய்வூதியத் தொகை ரூ.6 ஆயிரத்திலிருந்து ரூ.6,500 ஆக உயர்த்தப்படும்.

நீராபானம் திட்டத்தின் மூலம் விவசாயிகளின் வருமானம் 2 மடங்காக உயர்த்தப்படும்.

உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், இயற்கை மரணமடையும் விவசாயிகளுக்கான நிதி ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது என்று அறிவித்தார்.

மிகச்சிறந்த விஞ்ஞானியாகவும், தேசியளவில் புகழ்பெற்ற உயர்கல்வி வல்லுனராகவும் திகழும் பேராசிரியர் தியாகராஜனுக்கு ஏ.பி.ஜே.அப்துல்களாம் விருது வழங்கப்பட்டது.

துணிவு மற்றும் சாகச செயலுக்காக திருவண்ணாமலையைச் சேர்ந்த பிரீத்திக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது. 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் கேப்டனாக இருந்துள்ளார். அதோடு, சோல் ப்ரீ (SOUL FREE) என்ற அறக்கட்டளையும் தொடங்கியுள்ளார்.

காவல் வீட்டு வசதி வாரியம், வேளாண் துறை, வணிக வரித்துறையினருக்கு முதல்வரின் நல்லாளுமை விருது வழங்கப்பட்டது.

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கான விருது வழங்கப்பட்டது.

சிறந்த மாநகராட்சிக்கான விருது மற்றும் முதல் பரிசு ரூ. 25 லட்சம் திருநெல்வேலி மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது.

சிறந்த நகராட்சிக்கான முதல் பரிசு சத்தியமங்கலத்திற்கும், பேரூராட்சிக்கான முதல் பரிசு பொன்னம்பட்டிக்கும் வழங்கப்பட்டது.

Leave a Response