சமூகவலைதளங்களை ஆட்கொண்ட ‘மெர்சல்’ பட பாடல் உற்சாகத்தில் படக்குழு

aala
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும்’மெர்சல்’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய இசையில் உருவாகியுள்ள பாடல்களில் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் மட்டும் இணையத்தளங்களில் வெளியிட்டது படக்குழு.

கடந்த வாரம் அதிகம் பேர் இப்பாடல் தொடர்பாக தேடியதாக கூகுள் ட்ரெண்ட்ஸ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும், வேல்ட் மியூசிக் அவார்ட்ஸ் ட்விட்டர் பக்கத்தில் ‘ஆளப்போறன் தமிழன்’ பாடல் சமீபத்திய இந்தியாவின் முதல் பாடல் என்று அறிவித்துள்ளது. இவ்விரண்டு அறிவிப்பால் படக்குழு மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறது.

தமிழ் மொழியின் பெருமையை பற்றிய பாடல் என்பதால் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இப்பாடலைத் தேடி கேட்டதால் இந்தப் பெருமையை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் போக, மேலும் 4 பாடல்கள் ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்றுள்ளது. ஆகஸ்ட் 20-ம் தேதி இப்படத்தின் முழுமையான இசையை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ படத்தில் விஜய், நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா, வடிவேலு, சத்யராஜ், யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை தங்களுடைய தயாரிப்பில் 100-வது படமாக பெரும் பொருட்செலவில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

‘மெர்சல்’ பணிகளை முடித்துவிட்டு, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் விஜய்.இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Leave a Response