பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
அதில் இந்திய – சீன தேசியக் கொடிகளுடன், இனிய நண்பர்கள் தினத்தில் அமைதி வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய – சீனா இடையே எல்லைப் பிரச்சனை நீண்ட காலமாகவே தொடர்ந்து வருகிறது.
அதனால் இந்த நல்ல நாளில் இருநாடுகளிடையே அமைதி நிலவ வலியுறுத்துவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.