சென்னை அண்ணாசாலையில் அரசுப் பேருந்து விபத்து!

anna
சென்னையில் எப்போதுமே பரபரப்பாக இருக்கும் பகுதிகளில் அண்ணாசாலையும் ஒன்று. வழக்கம்போலவே இன்றும் வாகனங்கள் பரபரப்பாக சென்று கொண்டிருந்தன. அப்போது மேற்கு சைதாப்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. ஸ்பென்சர் பிளாசா அருகேயுள்ள பேருந்து நிறுத்தம் அருகே வந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது. அதில், சாலையில் வைக்கப்பட்டிருந்த வழிகாட்டும் அறிவிப்புப் பலகையின் தடுப்புக் கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், அந்த அறிவிப்புப் பலகை பேருந்தின் முன்பக்கத்தின் மீது விழுந்தது. இதில், பேருந்தின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்தது. இந்த விபத்தில் 6 பெண்கள் உள்பட 8 பேர் படுகாயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

Leave a Response