தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி !

sl-vs-ind

இலங்கை அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் காலே நகரில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் இன்று கொழும்பு நகரில் தொடங்குகிறது. முதல் போட்டியில் இந்திய அணியின் வழக்கமான தொடக்க வீரர் கே.எல்.ராகுல், வைரஸ் காய்ச்சல் காரணமாக களமிறங்கவில்லை.

kl

அவர் விளையாடாத நிலையிலும் இந்திய அணியின் திறன் எந்த வகையிலும் பாதிக்கவில்லை. தற்போது ராகுல் முழுவதும் குணமடைந்துள்ளார். நேற்று அவர் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டார். இன்றைய ஆட்டத்தில் ராகுல் களமிறங்கும் பட்சத்தில், அபிநவ் முகுந்த் வெளியே அமரவைக்கப்படுவார்.

கடந்த 12 மாதங்களுக்கு முன்பு இதே இலங்கை அணிதான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் 3-0 என வென்றது. ஆனால் தற்போது அணியின் திறன் அப்படியே மாறி உள்ளது. மேலும் இந்திய தொடருக்கு பயன்படுத்தப்படும் ஆடுகளங்களும் பெரிய அளவில் மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கின்றன. இதுவும் இலங்கை அணிக்கு சோதனையாக அமைந்துள்ளது.

Leave a Response