# கோச்செங்கட் சோழ மன்னனால் சோழ வள நாட்டில் அமைக்கப்பட்ட மாடக்கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.
# ஞான சமபந்தர் மற்றும் திருநாவுக்கரசரால் பாடல் பெற்றது.
# அகத்தியர் மற்றும் பல சித்தர்கள் வழிபட்ட திருத்தலமாகும்.
# உலக நாயகனும் உலகளந்த பெருமானும் உடனுறையும் மாடக்கோவில்.
# சிவனின் திருமேனி கைலாய மலைக்கல்லால் சுயம்புவாக உருவானது.
# அம்பாள் கிழக்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் தமிழ் நாட்டின் மூன்று தலங்களில் திருவாரூர், திருமெய்ச்சூர், தவிர இத்தலமான திருப்பெருவேளூரும் ஆகும்.
# ஶ்ரீ கால பைரவர், ஶ்ரீ பைரவர், ஶ்ரீ வடுக பைரவர் என்ற பெயர்களுடன் மூன்று பைரவர்கள் அருளாட்சி புரிகின்றனர்.
# இவ்வூரில் முற்காலத்தில் 18 சிவாலயங்கள், 18 தீர்த்தங்கள், 18 திருவீதிகள் இருந்தன.
# இந்த மாடக்கோயிலின் படிகளும் 18 ஆக அமைந்துள்ளது.
# வாயு பகவானுக்கும் ஆதிசேடனுக்குமிடையே நடந்த போட்டியின் காரணமாக வந்து விழுந்த கயிலை மலை சிகரங்களுள் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.
# ராமலிங்கேஸ்வரர், சரஸ்வதீஸ்வரர், ஜம்புலிங்கேஸ்வரர், ஐராவதீஸ்வரர், தாரகேஸ்வரர், தர்மபுரீஸ்வரர் என்ற ஆறு சிவலிங்கங்களை தன்னகத்தே இத்தலம் கொண்டுள்ளது.
# ஶ்ரீ வைகுண்ட நாராயணப் பெருமாளுக்கு தனி சன்னதி இவ்வாலயத்தில் உள்ளது.
# இந்த ஆலயத்தில் ஶ்ரீ கணபதி தனது வாகனமின்றி தனிமையில் அருள்புரிகிறார்.
# நான்கு முனிவர்களுடன் தட்சிணாமூர்த்தி அனுகூல மூர்த்தியாக விளங்குகிறார்.
# சுப்பிரமணியர், வள்ளி தெய்வானையுடன் அருள்புரிகிறார்.
# அம்பிகை தனது இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்ட நிலையில் வீராசனம் அமைத்து
அமர்ந்து இருக்கிறார்.
# லலிதா திரிசடை தோன்றிய இடம் இதுவாகும்.
# சுக்கிர நீச பரிகார திருத்தலமாகவும் விளங்குகிறது.
# இங்குள்ள வனதுர்க்கை அருள் புரிவதில் வல்லவர்.
# ஆலயத்தின் பின்புறம் தீராத நோய்களை தீர்த்து வைக்க முருகப் பெருமானால் தோற்றுவிக்கப்பட்ட சரவணப் பொய்கை அமைந்துள்ளது. இது தற்போது தாமரைக்குளம் என்றழைக்கப்படுகிறது.
# சனீஸ்வரரும், சூரியனும் மேற்கு நோக்கி அமர்ந்து அனைத்து நவக்கிரக தோஷங்களையும் போக்கி விடுகின்றனர்.
# யோக சண்டிகேசர் உட்பட இரண்டு சண்டிகேசர்கள் உள்ளனர்.
# இவ்வூரின் நான்கு திசைகளிலும் காவல் தெய்வமான நான்கு அய்யனார் ஆலயங்கள் அமைந்துள்ளன.
# திருமணத்தடைகள் நீங்கவும், மக்கட்பேறு கிட்டவும் வணங்க வேண்டிய ஆலயம்.
# இவ்வூரில் மிகவும் சிறப்பு வாய்ந்த மேலத்தெரு ஶ்ரீ முத்துமகா காளியம்மன் ஆலயமும், கீழத்தெரு ஶ்ரீ வாலை முக்கண்ணியம்மன் ஆலயமும் அமைந்துள்ளது.
# ஶ்ரீ முத்து மாரியம்மன் ஆலயமும் இவ்வூரில் அமைந்துள்ளது.
# இவ்வூரில் எட்டு வினாயகர் ஆலயங்கள் தனித்தனியாக அமைந்துள்ளன.