அதிகாரிகளின் மாற்றத்தால் மறைக்கப்படும் குற்றங்கள்?

rupaa
சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்குவதற்காக 2 கோடி வரை பணம் வங்கப்பட்டதாக குற்றச்சாட்டை கர்நாடக சிறைத்துறை டிஐஜி புகாரை முன்வைத்தார். இது பல சர்ச்சைகளை கிளப்பிய நிலையில்,

கர்நாடக அரசின் உத்தரவை மீறி ஊடகங்களுக்கு ரூபா பேட்டியளித்தார். அதனால் ரூபாவை பணியிட மாற்றம் செய்துள்ளது. இவரை மட்டும் பணியிட மாற்றம் செய்தால் இந்த காரணத்திற்காக தான் என்று விமர்சனம் எழும் என்று அவருடன் மேலும் 4 போலீஸ் உயர் அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது கர்நாடக அரசு.

பணியிட மாற்றம் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரிகள்:

ரூபா (டிஐஜி) – போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு

எம் என் ரெட்டி (டிஜிபி எசிபி) – ஊழல் தடுப்புப் பிரிவு

என் எஸ் மெக்ரிக் (எ.டி.ஜி.பி) – சிறைத் துறை பிரிவு

ஏ எஸ் என் மூர்த்தி (எடிஜிபி) – வனத்துறை

அம்ரூத் பால் (ஐஜிபி) – நுண்ணறிவுப் பிரிவு

Leave a Response