தும்கூர் சிறைக்கு மாற்றப்படுவாரா சசிகலா?

jail
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளா் சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் வைக்கப்பட்டுள்ளார். சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதற்காக 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா புகார் கூறியிருந்தாா். இது, தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் உள்ள நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள கைதிகள் இரு குழுக்களாக பிாிந்துள்ளனா். ஒரு குழுவினா் டி.ஐ.ஜி. ரூபாவுக்கும் மற்றொரு குழுவினா் டிஜிபி சத்யநாராயண ராவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகின்றன. இரு கோஷ்டிகளுக்கும் இடையே மோதல் உருவாக வாய்ப்புள்ளது. அதனை தடுக்கும் விதமாக 32 கைதிகள் வெவ்வேறு சிறைகளுக்கு நேற்று மாற்றப்பட்டனர்.

சசிகலாவுக்கு பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் அவரையும் வேறு சிறைக்கு மாற்ற கர்நாடக அரசு ஆலோசித்து வருகிறது என்று சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளன. அவரை தும்கூர் சிறைக்கு மாற்றப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

Leave a Response