மிக்ஸியில் 1.29 கிலோ தங்கம் கடத்திய பெண் கைது!..

thangam2
தெலுங்கான மாநிலம் ஹைதராபாத் விமான நிலையத்தில், மிக்ஸி மோட்டாரில் தங்கம் கடத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
மிக்ஸி மோட்டாரில் அவர் கொண்டு வந்த 1 கிலோ 300 கிராம் எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜுவ் காந்தி பன்னாட்டு விமான நிலையத்திற்கு அபுதாபியில் இருந்து நேற்று மதியம் 3.10 மணிக்கு எடியாட் இ.எக்ஸ். 274 விமானம் வந்தது.

இதில் வந்த பெண் பயணி ஒருவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் வருவாய் புலனாய்வு இயக்குனராக அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அந்தப் பெண் கொண்டு வந்த மிக்ஸியை திறந்து மோட்டாரை உடைத்து பார்த்த அதிகாரிகள், அதிலிருந்த 1 கிலோ 300 கிராம் எடையுள்ள தங்கம் கடத்தி வந்ததைக் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்த போலீசார் அந்தப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Response