ஆட்டோ ஓட்டுனரின் உடல் உறுப்புகள் 3 பேருக்கு தானம்…

auto 2
நரசோதிப்பட்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோபி, 40. இவரது மனைவி கோகிலா, 35. இவர்களுக்கு ஜெகதீஸ்வரன், ஸ்ரீலேகா, ஸ்ரீகலா என, மூன்று குழந்தைகள் உள்ளனர். கடந்த, 17 இரவு, 9:30 மணிக்கு கருப்பூரில் இருந்து, மொபட்டில் சேலம் நோக்கி, கோபி வந்து கொண்டிருந்தார். டால்மியாபுரம் அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், படுகாயம் அடைந்தார்.

பின்னர், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மூளைச்சாவு அடைந்தார். அவரது குடும்பத்தார் ஒப்புதலுடன், கடந்த, 20ல் ஆப்பரேஷன் மூலம், கோபியின் சிறுநீரகம், கல்லீரல் உள்பட உடல் உறுப்புகள் அகற்றப்பட்டு, மூன்று பேருக்கு தானமாக வழங்கப்பட்டன. பின், சொந்த ஊரான, ஓமலூர் அருகே, பெரியேரிப்பட்டிக்கு, கோபியின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, இறுதி அஞ்சலிக்கு பின், நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

உறுப்புகளை தானம் செய்த குடும்பத்தாரை, ஊர்மக்கள் பாராட்டினர்.

Leave a Response