தந்தை இறந்தது கூட தெரியாமல் விளையாடிய இரண்டு வயது சிறுவன்…

karur
திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்தவர் அய்யர் நாயக்கர்(50). இவர் நாடக நடிகர். இவருக்கும் வரகூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் 20 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடத்தது. பின்னர் இருவரும் பிரிந்தனர். இதனையடுத்து அவர் வேற்று சமுதாயத்தை வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் ஊர் மக்கள் அவரை தள்ளிவைத்தாக கூறப்படுகிறது.

இவருக்கும் இவரது இரண்டாவது மனைவிக்கும் தவசு மணி என்ற ஆண் குழந்தை உள்ளது. ஒராண்டுக்கு முன்பு அய்யர்நாயக்கரின் இரண்டாவது மனைவி இறந்துவிட்டார். இதனையடுத்து அவர் தனது மகனுடன் கரூர் மாவட்டம் தோகமலையில் தனியாக தங்கி வந்தார்.

இதனையடுத்து இந்த தகவலை ஊர் மக்கள் போலீசாரிடம் அளித்தனர். அய்யாநாயக்கரிடம் உறவினரிடம் போலீசார் விசாரணை நடத்தினார். ஆனால் அவரிடம் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர். இதனால் அனாதை பிணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். மேலும் அய்யர்நாயக்கனின் மகனை கரூர் மாவட்ட குழந்தைகள் காப்பத்தில் போலீசார் ஓப்படைத்தனர்.

இந்த நாடக கலைஞரின் இரண்டு வயது மகனுக்கு நடிகரும், நடிகர் சங்கத்தலைவருமான விஷால் எதாவது ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும்.

Leave a Response