மறுபடியுமா…

reserve-bank-of-india-rbi-
கடந்தாண்டு செப்டம்பர் 8 ஆம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்து புதிய நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். கறுப்புப் பண புழக்கம் மற்றும் லஞ்சத்தை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் காந்தி படம் தாங்கிய புதிய 500 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்படும் என்று இன்று ஆர்பிஐ அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், ”புதிய 500 ரூபாய் நோட்டில் காந்தி படமும் இருக்கும். புதிதாக A என்ற ஆங்கில எழுத்து மட்டும் சேர்க்கப்படும். இந்த ஆங்கில எழுத்து number panelகளுக்கு அருகில் இருக்கும் என்றும். அதில் ஆர்பிஐ கவர்னர் டாக்டர் உர்ஜித் பட்டேலின் கையெழுத்தும் இடம் பெற்று இருக்கும். மேலும் 2017 என்று அச்சிடப்பட்டு இருக்கும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Response