ஜெயலலிதாவின் உருவப்படத்தை திறந்து வைக்க பிரதமர் மோடிக்கு அழைப்பு: தமிழக முதல்வர்…

eps-modi_meet_1_ed_3167766f
பிரதமர் நரேந்திர மோடியை இன்று (புதன்கிழமை) டெல்லியில் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், தமிழக சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், அந்த படத்தை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர வேண்டும் என்று அழைப்பு விடுத்ததாகவும் கூறினார்.

மேலும் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடங்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டு தமிழகம் முழவதும் நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில் வரும் டிசம்பர் மாத இறுதியில் சென்னையில் நடைபெற உள்ள பிரம்மாண்ட நிறைவு விழா மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அறிவிக்கப்படும் என்று கூறிய பழனிசாமி அரசு சார்பில் பிரதமரை சந்தித்தாகவும் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்தார்.

Leave a Response