மருத்து கடைகள் முழு அடைப்புப் போராட்டம்…

may30
என்னடா மே 30 அப்படி என்ன பாவம் பண்ணிச்சு தெரியல அன்னைக்கு முழுவது அடைப்பு நாளா இருக்கு. ஏன்னா ஏற்கனவே ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்பு தெரிவித்து உணவகங்கள் மே 30 அன்று முழு அடைப்பு. இந்நிலையில் மே 30 அன்று மருந்து கடைகள் கூட முழு அடைப்பு.

ஏனென்றால் சில நிறுவனங்கள் அனுமதியின்றி இணையதளம் மூலமாகவே மருந்துகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நாடு முழுவதும் மருந்து வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

தமிழகத்தில் உள்ள 30 ஆயிரம் மருந்தகங்கள் வரும் மே 30ஆம் தேதி மூடப்படும் என தமிழ்நாடு மருத்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் செல்வம் நேற்று திருச்சியில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

Leave a Response