படக்குழுவினரை ஆச்சர்யத்தில் முழ்க வைத்தார் துல்கர் சல்மான்…

thul
எல்லா நடிகர்களும் தங்களது வீட்டில் ஒரு நல்ல விஷயம் என்றால் வீட்டில் வைத்து கொண்டாடி பார்த்து இருப்பிங்க இல்ல நட்சத்திர ஹோட்டல் கொண்டாடி பாத்து இருப்பிங்க. ஆனா நம்ம துல்கர் சல்மான் ஒரு வித்தியாசமா கொன்ன்டாடியுள்ளார். எப்டினா முழுசா படியுங்க.

அதாவது மலையாள சினிமாவின் இளம் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் துல்கர் சல்மான். மெகாஸ்டார் மம்முட்டியின் மகனாகிய இவருக்கும் சென்னையை சேர்ந்த வட இந்திய முஸ்லீம் குடும்பத்தை சேர்ந்த அமல் சுபியாவுக்கும் 2௦11 டிசம்பரில் திருமணம் நடைபெற்றது.

சுமார் ஐந்து வருடம் கழித்து, கடந்த மே-5ல் துல்கர்-அமல் சுபியா தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தநிலையில் தனது குழந்தைக்கு மரியம் அமீரா சல்மான் என பெயர் வைத்துள்ளார் துல்கர் சல்மான்.அதிலும் தனது குழந்தைக்கு வைத்த பெயரை மற்றவர்களுக்கு எப்படி அறிவித்தார் தெரியுமா..?

தான் தற்போது நடித்து வரும் ‘சோலோ’ படத்தின் படப்பிடிப்பில் பணியாற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் படப்பிடிப்பு தளத்தில் விருந்தளித்ததுடன், கூடவே தனது மகளுக்கு பெயர் வைத்துள்ள விபரத்தை அழகான கிரீட்டிங் கார்டில் பிரின்ட் செய்து ஆளுக்கொன்றாக கையில் கொடுத்துள்ளார்.. அந்த படக்குழுவினரில் ஒருவர் அந்த கார்டை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் ஷேர் செய்ய அது இப்போது செம வைரலாகியுள்ளது.

Leave a Response