மீண்டும் தமிழகத்தில் ஜல்லிகட்டுக்கு தடையா….

jalli
மீண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த, வரும் ஜூன் முதல் ஏழு மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தடையால், தமிழகத்தில், இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. இந்நிலையில் தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மாணவர்கள், இளைஞர்கள், கடந்த ஜனவரி மாதம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அவசர சட்டம் கொண்டுவரப்பட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்ககப்பட்டது. இதன்படி, ஏற்கனவே ஜல்லிக்கட்டு நடந்த பகுதிகளுக்கு மட்டும், கலெக்டர்கள் அனுமதி அளித்து வருகின்றனர்.

கடந்த காலத்தில் கோவில், சர்ச் விழாக்கள் என ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு நடந்தது. இதன்படி, அனுமதி கேட்டு, கிராம மக்கள் தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், ஜனவரி முதல் மே வரை மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி உள்ளது என அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால், கிராம மக்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இது தொடர்பாக வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஜூன் முதல் விவசாய பணிகள் துவங்கிவிடும் என்பதால், ஜனவரி முதல் மே வரை மட்டுமே, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி உள்ளது. அதன்பின் விண்ணப்பம் அளித்தால் நிராகரிக்கப்படும்’ என்றார்.

Leave a Response