குரூப் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின…

tnpsc
இன்று அதிகாலையில் இருந்து அனைவரும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்பொழுது வெளியாகும் என்று ஆவலுடன் எதிர்பார்த்தனர். அதன் படி இன்று 10 மணியளவில் இணையதளத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இது ஒரு பக்கம் இருக்க மறு பக்கம் குரூப் 1 மெயின் தேர்வு முடிவுகள்கூட வெளியாகின.

அதாவது துணை ஆட்சியர் உள்ளிட்ட 74 பணியிடங்களுக்கு கடந்த ஆண்டும் ஜூலை மாதம் மெயின் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று தமிழக அரசின் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஜூன் 5 முதல் 9-ஆம் தேதி வரை சென்னையில் சான்றிதழ் சரிபாப்பு நடைபெறுகிறது.

Leave a Response