800 கிலோ எடை மதிப்புள்ள புள்ளி சுறா செத்து கரை ஒதுங்கிய பரிதாபம்…!

shark
கடல் வாழ் உயிரினங்கள் இயற்கைச் சூழல் காரணமாக, மனிதர்களின் ஆக்கிரமிப்பு காரணமாக இறந்து கரை ஒதுங்குவது வழக்கமாகி விட்டது. இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதியின் பாம்பன் குந்துகால் கடற்பகுதியில் நேற்று சுறா ஒன்று கரை ஒதுங்கியது.

சுமார் 800 கிலோ எடை கொண்ட புள்ளி சுறா, இரை தேடி கடலின் மேல் பகுதிக்கு வந்துள்ளது. அப்போது படகில் அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இறந்து போன சுறா, மீனவர்கள் வலையில் சிக்கி கரை ஒதுங்கியிருக்கலாம் என்று கூறப்பட்டது. இதையடுத்து அதனைக் கட்டி இழுத்துச் சென்ற அதிகாரிகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். பின்னர் கடற்கரை பகுதியில் குழி தோண்டி சுறாவை புதைத்தனர்.

Leave a Response