ஏரியில் தீ! திணறிய தீயணைப்பு துறையினர்!!

river fire
இன்று அதிகாலை பெங்களூரில் உள்ள பெல்லந்தூரில் உள்ள புகழ் மிக்க ஏரி ஒன்றில் தீ பிடித்து எரிந்தது. இவ்விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு உள்ள தீயனைப்பு படையினர் அந்த தீ விபத்தை அணைக்க முடியாமல் திணறி போனார்கள்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பெல்லந்தூர் ஏரி மிகவும் புகழ் பெற்றது. ஆனால் போதிய பராமரிப்பின்றி தண்ணீரில் வேதிப் பொருட்கள் கலந்து காணப்படுகின்றன. அதனால் ஏரியை சுத்தப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும் பராமரிப்பு பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்று நண்பகல் ஏரியில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அதனைக் கண்ட அருகில் உள்ள குடியிருப்பு பகுதியினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவம் இடத்திற்கு விரைந்த அவர்கள் ஏரியின் மையப்பகுதியில் தீப்பற்றி இருப்பதால் அதனை அணைக்க போதிய வசதிகள் இல்லை என்று தெரிவித்தனர்.

இதற்கிடையில் லேசான தூறல் பொழியத் தொடங்கியது. அதனால் தீ மேலும் பரவாமல் தடுத்து நிறுத்தப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் சமீப காலமாக நாள்தோறும் தீவிபத்து ஏற்படுவதாக குறிப்பிட்டனர். விரைவில் பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

Leave a Response